Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருச்சியில் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றித்திரிந்த மக்கள்

திருச்சியில் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றித்திரிந்த மக்கள்

By: Nagaraj Sun, 23 Aug 2020 7:16:41 PM

திருச்சியில் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றித்திரிந்த மக்கள்

ஊரடங்கை மீறிய மக்கள்... திருச்சி மாவட்டத்தில் தளர்வற்ற ஒரு நாள் ஊரடங்கு இன்று அமலில் இருந்த நிலையில், வாகன இயக்கம் இன்றி சாலைகள் ஒருபுறம் வெறிச்சோடி காணப்பட்டாலும், மறுபுறம் ஊரடங்கைக் கடைபிடிக்காமல் பல இடங்களிலும் பொதுமக்கள் வாகனங்களில் வெளியே சுற்றினர்.

தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 25-ம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து, பல்வேறு தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் ஆகியவற்றுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 7-ம் கட்டமாக ஊரடங்கு அமலில் உள்ளது.

இதன்படி, திருச்சி உள்ளிட்ட கொரோனா பரவல் குறைந்துள்ள மாவட்டங்களில் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை மட்டும் எவ்வித தளர்வும் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முறையிலான ஊரடங்கு தமிழ்நாடு முழுவதும் ஜூலை மாதம் அமல்படுத்தப்பட்டு, ஆகஸ்ட் மாதமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

curfew,litigation,outings,nomads,much ,ஊரடங்கு, வழக்குப்பதிவு, வெளியே சுற்றியவர்கள், நடமாட்டம், அதிகம்

இதன்படி, ஆக.2, 9, 16, 23, 30 ஆகிய 5 நாட்கள் முழு ஊரடங்கு அமலில் இருக்கும். கடந்த மாதமும், நிகழ் மாதம் முந்தைய முழு ஊரடங்கு நாட்களிலும் மாநகரச் சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி, வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.

ஆனால், இன்றைய முழு ஊரடங்கு நாளில் மாநகரின் பல்வேறு சாலைகளிலும் இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்கள் அதிகளவில் காணப்பட்டன. அதேபோல், பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் நடமாட்டமும் அதிகமாக இருந்தது.

ஊரடங்கை மீறி வெளியே சுற்றியவர்களை காவல்துறையினர் குறிப்பிட்ட இடங்களில் தடுத்து நிறுத்தி விசாரித்து, முறையான பதில் அளிக்காதவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

Tags :
|
|