Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கும்பலை கைது செய்த போலீசார்

கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கும்பலை கைது செய்த போலீசார்

By: Karunakaran Fri, 18 Dec 2020 09:28:53 AM

கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கும்பலை கைது செய்த போலீசார்

பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் உள்ள ஒரு வீட்டில் போதைப்பொருள் கடத்தல் சம்பவம் அரங்கேறிவருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸ் உடையில் சென்றால் கடத்தல் கும்பல் உஷார் ஆகிவிடும் என எண்ணிய போலீஸ் கிறிஸ்துமஸ் பண்டிகையை பயன்படுத்தி கடத்தல் கும்பலை பிடிக்க முடிவு செய்தனர்.

இதற்காக இரண்டு போலீஸ் அதிகாரிகள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து போதைப்பொருள் கும்பல் பதுங்கி இருந்த வீட்டின் அருகே வாகனத்தில் சென்றனர். கடத்தல் கும்பல் அந்த வீட்டில் தான் இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்ய அந்த இரண்டு போலீசாரும் யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக கிறிஸ்துமஸ் தாத்தா உடையுடன் புறப்பட்டனர்.

police,drug trafficking,christmas grandfather,peru ,போலீஸ், போதைப்பொருள் கடத்தல், கிறிஸ்துமஸ் தாத்தா, பெரு

கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்துடனும் கடத்தல் கும்பல் தங்கியுள்ள வீட்டின் கதவை உடைக்க வேண்டும் என்பதற்காக ஒரு போலீஸ் அதிகாரி தனது சுத்தியலை எடுத்துக்கொண்டு வேகமாக ஓடிவந்தார். கடத்தல் கும்பல் வீட்டை அடைந்த போலீசார் தங்கள் கையில் எடுத்து வந்திருந்த சுத்தியலை கொண்டு கடத்தல் கும்பல் பதுங்கி இருந்து வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தனர். அங்கு அந்த வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.

உடனடியாக அந்த கடத்தல் கும்பலை கைது செய்ய போலீசார் அவர்களிடம் இருந்து கிலோ கணக்கில் போதைப்பொருளை கைப்பற்றினர். மேலும், துப்பாக்கி உள்பட பயங்கர ஆயுதங்களையும் கைப்பற்றினர். இதையடுத்து, போதைபொருள் கடத்தலில் ஈடுபட்ட 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர். போலீசார் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த போலீசார் போதைபொருள் கடத்தல் கும்பலை கைது செய்யும் வீடியோ சமூகவலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Tags :
|