Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நிவர் புயல் காரணமாக புதுச்சேரி பள்ளிகளுக்கு 28ம் தேதி வரை விடுமுறை

நிவர் புயல் காரணமாக புதுச்சேரி பள்ளிகளுக்கு 28ம் தேதி வரை விடுமுறை

By: Monisha Thu, 26 Nov 2020 09:50:22 AM

நிவர் புயல் காரணமாக புதுச்சேரி பள்ளிகளுக்கு 28ம் தேதி வரை விடுமுறை

வங்க கடலில் மையம் கொண்டிருந்த அதிதீவிர புயலான நிவர் புயல், புதுச்சேரி-மரக்காணம் இடையே நேற்று இரவு கரையை கடந்தது. புயல் கரையை கடந்த போது புதுச்சேரி உள்ளிட்ட சில பகுதிகளில், மணிக்கு 120 முதல் 140கி.மீ. வரையில் பலத்த காற்றும், கனமழையும் பெய்தது.

இதனை அடுத்து, நிவர் புயல் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து செல்கிறது. இதனால் அடுத்த 3 மணிநேரத்தில் தீவிர புயல், புயலாக வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நிவர் புயலால் புதுச்சேரியின் வடகிழக்கில் மணிக்கு 100 முதல் 110கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும்.

hurricane,heavy rain,flood,schools,holidays ,நிவர்புயல்,கனமழை,வெள்ளம்,பள்ளிகள்,விடுமுறை

பின்னர் அடுத்த மூன்று மணிநேரத்தில் காற்றின் வேகம் மெல்ல குறைந்து 65 முதல் 75கி.மீ. வேகத்தில் வீச கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நிவர் புயலால் புதுச்சேரி, காரைக்கால் கனமழை பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

கன மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனைத்தொடந்து புதுச்சேரியில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. எனினும், தொடர்ந்து பெய்து வரும் கனமழை, வீடுகள் மற்றும் கட்டிடங்களை சூழ்ந்து காணப்படும் மழை நீர், மின் இணைப்பு துண்டிப்பு போன்ற பல்வேறு காரணங்களால், புதுச்சேரி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு வரும் 28ம் தேதி வரை விடுமுறையை நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|