நம்ம ஊர் பொங்கல் என்ற தலைப்பில் பொங்கல் விழா- எல். முருகன்
By: Monisha Wed, 30 Dec 2020 1:26:14 PM
கோவை காந்திபுரத்தில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலுக்கான களப்பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில தலைவர் எல். முருகன் கலந்துகொண்டு பேசியதாவது:-
தமிழகத்தில் பா.ஜனதா சார்பில் வருகிற 9-ம் தேதி மற்றும் 10-ம் தேதியில் நம்ம ஊர் பொங்கல் என்ற தலைப்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் வருகிற சட்டமன்ற தேர்தலுக்கான களப்,பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பூத் கமிட்டி அமைப்பதற்கான பணிகளை நிர்வாகிகள் முன்னின்று செய்ய வேண்டும். இதனை கண்காணிக்க தனியாக நிர்வாகிகளை நியமித்து மாநில மாநாடு, தொகுதி மாநாடு என நடத்தி மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்களை தெளிவு படுத்த வேண்டும் என அவர் பேசினார்.
கூட்டத்துக்கு பிறகு பா.ஜனதா மாநில தலைவர் எல். முருகனிடம், ரஜினியின் அரசியலுக்கு வரவில்லை என்ற அறிவிப்பு குறித்த அவரது நிலைப்பாடு பற்றி கேள்வி எழுப்பியதற்கு, பதில் அளிக்காமல் சிரித்தபடியே சென்றுவிட்டார்.