Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • துனிசியா ஜனாதிபதியிடம் இராஜினாமா கடிதம் அளித்தார் பிரதமர் எலிஸ் ஃபக்ஃபாக்

துனிசியா ஜனாதிபதியிடம் இராஜினாமா கடிதம் அளித்தார் பிரதமர் எலிஸ் ஃபக்ஃபாக்

By: Nagaraj Thu, 16 July 2020 6:38:02 PM

துனிசியா ஜனாதிபதியிடம் இராஜினாமா கடிதம் அளித்தார் பிரதமர் எலிஸ் ஃபக்ஃபாக்

இராஜினாமா செய்தார்... துனிசியாவின் பிரதமர் எலிஸ் ஃபக்ஃபாக் (Elyes Fakhfakh), தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் ஒப்படைத்துள்ளார்.

கடந்த ஆண்டு பொதுத் தேர்தல்களைத் தொடர்ந்து ஜனவரி மாதம், ஜனாதிபதி கைஸ் சையத் அவர்களால் ஃபக்ஃபாக் பிரதமராக நியமிக்கப்பட்டார். இந்தநிலையில், மிதவாத இஸ்லாமிய எதிர்க்கட்சியான என்னாதா நாடாளுமன்றில் கொண்டுவந்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் பின்னர், ஃபக்ஃபாக்கின் இந்த இராஜினாமா முடிவுக்கு வந்துள்ளார்.

state treaty,prime minister,tunisia,resignation,indictment ,மாநில ஒப்பந்தம், பிரதமர், துனிசியா, இராஜினாமா, குற்றச்சாட்டு

மேலும், அரசியல் மோதல்களைத் தடுக்கும் நோக்கில் ஃபக்ஃபாக்கின் இராஜினாமா அமைந்துள்ளதாக பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தேசிய நலனுக்காகவும், நாட்டில் உள்ள அரசு நிறுவனங்களுக்கு டையில் மேலும் மோதல்களைத் தவிர்ப்பதற்காகவும், அரசியல் வாழ்க்கையை ஒழுக்கமயமாக்கும் கொள்கையை நிலை நிறுத்துவதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபக்ஃபாக், மாநில ஒப்பந்தங்களைப் பெற்ற நிறுவனங்களில் பங்குகளை வைத்திருப்பதன் மூலம் வட்டி மோதல் குற்றச்சாட்டுக்கு ஆளானார் என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இது தவறான குற்றச்சாட்டுகள் என கூறி இதனை அவர் மறுக்கிறார்.

Tags :