Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரதமர் மோடி விவசாயிகளுக்கு மிகப்பெரிய அநீதி இழைத்துவிட்டார் - சோனியா காந்தி

பிரதமர் மோடி விவசாயிகளுக்கு மிகப்பெரிய அநீதி இழைத்துவிட்டார் - சோனியா காந்தி

By: Karunakaran Fri, 02 Oct 2020 6:30:13 PM

பிரதமர் மோடி விவசாயிகளுக்கு மிகப்பெரிய அநீதி இழைத்துவிட்டார் - சோனியா காந்தி

மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்கட்சிக்கள் உள்பட பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த வேளாண் மசோதாக்களுக்கு எதிராக பஞ்சாப் உள்பட பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வேளாண் மசோதாக்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சோனியா காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் உள்ளது என்பதை மோடி அரசு உணர்ந்து செயல்பட வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது விவசாயிகளை ஆலோசிக்காமல் எந்தவொரு வேளாண் சட்டத்தையும் அமல்படுத்தியதில்லை என்று கூறினார்.

modi,injustice,farmers,sonia gandhi ,மோடி, அநீதி, விவசாயிகள், சோனியா காந்தி

மேலும் அவர், மோடி தலைமையிலான அரசு விவசாயிகளை கலந்து ஆலோசிக்காமல் முதலாளிகளுக்காக சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. வேளாண சட்டங்களைத் திரும்ப பெறும் வரை விவசாயிகளுடன் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும். வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் கட்சி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.

வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாபிலிருந்து டெல்லி நோக்கி அக்டோபர் 3 முதல் 5-ஆம் தேதி வரை ராகுல்காந்தி தலைமையில் டிராக்டர் பேரணி நடைபெறும். இதில் பஞ்சாப் விவசாயிகள் மற்றும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தொண்டர்கள் கலந்துகொள்ள வேண்டும் என்று சோனியா காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags :
|