Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா தடுப்பு மருந்து... பிரதமர் மோடி நாளை முதலமைச்சர் பழனிசாமியுடன் ஆலோசனை!

கொரோனா தடுப்பு மருந்து... பிரதமர் மோடி நாளை முதலமைச்சர் பழனிசாமியுடன் ஆலோசனை!

By: Monisha Mon, 23 Nov 2020 2:46:27 PM

கொரோனா தடுப்பு மருந்து... பிரதமர் மோடி நாளை முதலமைச்சர் பழனிசாமியுடன் ஆலோசனை!

கொரோனா தடுப்பு மருந்து விநியோகம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா தடுப்பு மருந்தை விநியோகிப்பது தொடர்பாக நாளையும், நாளை மறுநாளும் அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பு மருந்தை யாருக்கு எப்படி பயன்படுத்துவது என்று மாநில அரசுகளுக்கு பிரதமர் ஆலோசனைகளை வழங்க உள்ளார்.

corona virus,vaccine,prime minister modi,edappadi palanisamy,consultation ,கொரோனா வைரஸ்,தடுப்பு மருந்து,பிரதமர் மோடி,எடப்பாடி பழனிசாமி,ஆலோசனை

முதல் நாளில் எட்டு மாநில முதலமைச்சர்கள் ஆலோசனையில் கலந்துக் கொள்கின்றனர். இரண்டாவது நாளில் எஞ்சிய மாநில முதலமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.

தேசிய தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சில நாட்களாக 50,000 க்கும் குறைவாகவே இருந்தபோதிலும், பல நகரங்களில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகின்றன. இதன் விளைவாக சில நகரங்களில் ஊரடங்கு உத்தரவு உட்பட பல நடவடிக்கைகளை அமல்படுத்தப்பட்டுள்ளது.

Tags :