Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதிய கல்விக் கொள்கை போன்ற பல அம்சங்கள் தொடர்பாக நாளை மாலை பிரதமர் மோடி உரை

புதிய கல்விக் கொள்கை போன்ற பல அம்சங்கள் தொடர்பாக நாளை மாலை பிரதமர் மோடி உரை

By: Karunakaran Fri, 31 July 2020 2:23:30 PM

புதிய கல்விக் கொள்கை போன்ற பல அம்சங்கள் தொடர்பாக நாளை மாலை பிரதமர் மோடி உரை

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் கல்விக்கு ஒதுக்குவது, தொழில்முறைக் கல்வி, நெகிழ்வான பாடத்திட்டங்கள், பாடங்களில் படைப்புச் சேர்க்கைகள், ஒருங்கிணைந்த தொழில் கல்வி மற்றும் உரிய சான்றிதழ்களுடன் பல்முனை நுழைவு, வெளியேறுதல், ஆய்வுகளுக்காக அதிக நிதி ஒதுக்குவது, ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழிக் கல்வி என பல விஷயங்கள் குறித்து இந்தியாவின் புதிய கல்விக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.

மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட சில அம்சங்களுக்கு தமிழகம் போன்ற பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இருப்பினும் மத்திய மந்திரிசபை கூட்டத்தில் புதிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

prime minister modi,new education policy,corona virus,speech ,பிரதமர் மோடி, புதிய கல்வி கொள்கை, கொரோனா வைரஸ், உரை

புதிய கல்விக் கொள்கை குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி நாளை மாலை 4.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். இந்த உரையின் போது, புதிய கல்விக் கொள்கை தொடர்பாக அவர் விளக்கமாக பேச உள்ளார்.

கொரோனா பாதிப்பு, விமானப் படையில் ரபேல் போர் விமானங்கள் சேர்ப்பு போன்ற விவகாரங்கள் குறித்தும் பிரதமர் தனது உரையில் குறிப்பிடலாம் என கூறப்படுகிறது. கொரோனாவுக்கு மத்தியில் புதிய கல்வி கொள்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Tags :