Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நெருக்கடிக்கு மத்தியில் மக்களுக்கு உதவ பிரதமர் நரேந்திர மோடி தைரியமான முடிவுகளை எடுத்தார் - ஜே.பி. நட்டா

நெருக்கடிக்கு மத்தியில் மக்களுக்கு உதவ பிரதமர் நரேந்திர மோடி தைரியமான முடிவுகளை எடுத்தார் - ஜே.பி. நட்டா

By: Karunakaran Tue, 28 July 2020 11:20:51 AM

நெருக்கடிக்கு மத்தியில் மக்களுக்கு உதவ பிரதமர் நரேந்திர மோடி தைரியமான முடிவுகளை எடுத்தார் - ஜே.பி. நட்டா

மகாராஷ்டிர மாநில பாஜக செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றபோது, அதில் பாஜக கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், பாரதீய ஜனதாவின் மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவை வலுப்படுத்த வேண்டும். மாநில பாரதீய ஜனதா 67 ஆயிரம் வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கியுள்ளதாக கூறினார்.

மகாராஷ்டிர அரசின் தோல்வியை அம்பலப்படுத்தவும், மத்திய அரசின் சாதனைகளை அடிக்கோடிட்டு காட்டவும் வாட்ஸ்அப் குழுக்கள் பயன்படுத்தப்பட வேண்டும். கொரோனாவுக்கு மத்தியில் நமது பிரதமர் மக்களுக்கு உதவ சுகாதாரம் மற்றும் பொருளாதாரத்தில் தைரியமான முடிவுகளை எடுத்தார் என ஜே.பி. நட்டா தெரிவித்தார்.

j.p. natta,modi,corona virus,crisis ,ஜே.பி.நட்டா, மோடி, கொரோனா வைரஸ், நெருக்கடி

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பொருளாதாரம் மற்றும் சுகாதாரம் குறித்து விவாதிக்க அதிக நேரத்தை எடுத்துக்கொண்டன. இது கொரோனா வைரஸ் நெருக்கடியை மோசமாக்க வழிவகுத்தது. இந்த நாடுகள் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்க தவறிவிட்டதாக ஜே.பி. நட்டா கூறினார்.

மேலும் அவர், பிரதமர் நரேந்திர மோடியை போன்ற சக்திவாய்ந்த தலைவர் இல்லாதிருந்தால், தற்போதைய நெருக்கடியில் இந்தியா சிறப்பாக செயல்பட முடியாது. மாநில பாஜக உருவாக்கிய 67 ஆயிரம் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் பிரதமர் நரேந்திர மோடியின் உரைகளை பகிர்ந்து கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்.

Tags :
|