Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விவசாயிகளுக்கு ஆதரவாக 18-ம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம்- பி.ஆர். பாண்டியன்

விவசாயிகளுக்கு ஆதரவாக 18-ம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம்- பி.ஆர். பாண்டியன்

By: Monisha Mon, 14 Dec 2020 3:27:00 PM

விவசாயிகளுக்கு ஆதரவாக 18-ம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம்- பி.ஆர். பாண்டியன்

தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் மன்னார்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். பேட்டியின் போது அவர் தெரிவித்ததாவது:- மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற மூன்று வேளாண் விரோத சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியை விவசாயிகள் முற்றுகையிட்டுள்ளனர்.

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், விவசாயிகள் போர்வையில் போராட்டக் களத்தில் நக்சலைட்டுகளும், பயங்கரவாதிகளும் உள்ளே நுழைந்து இருக்கிறார்கள் என்ற அப்பட்டமான பொய்யை தெரிவித்து இருப்பது கண்டிக்கதக்கது. இதனை அவர் திரும்ப பெற வேண்டும். நியாயமான கோரிக்கையை ஏற்று சட்டத்தை திரும்பப் பெறுவதற்கு பிரதமர் உடனே விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

farmers,struggle,support,interview,siege ,விவசாயிகள்,போராட்டம்,ஆதரவு,பேட்டி,முற்றுகை

இதனை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து இருக்கிறது. போராட்டக் குழு அறை கூவலுக்கு இணங்க தமிழ்நாட்டிலும் சுங்கச்சவடிகளை தடுத்து நிறுத்துவது, ரெயில் நிலையங்கள், மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கிறோம்.

இதனை வலியுறுத்தி தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் வரும் 18-ம் தேதி காலை 10.00 மணிக்கு சென்னை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என அவர் தெரிவித்தார்.

Tags :