வீடின்றி தெருவோரங்களில் படுத்து உறங்குபவர்களுக்கு போர்வை வழங்கல்
By: Nagaraj Wed, 30 Dec 2020 2:00:27 PM
உற்றார், உறவினர்களால் கைவிடப்பட்டு இருப்பிடம் இல்லாமல் சாலையோரம், ரயில்வே பிளாட்பார்ம், பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் படுத்து உறங்கும் ஏழைகளுக்கு குளிர்காலத்தை கருத்தில் கொண்டு பூதலூர் லயன்ஸ் கிளப் சார்பில் போர்வைகள் வழங்கப்பட்டது.
தஞ்சை மாவட்டம் பூதலூரில் இயங்கி வரும் லயன்ஸ் கிளப் சார்பில் பல்வேறு நலத்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் மக்களுக்கு தேவையான பல்வேறு உதவிகள் செய்யப்பட்டது. பூதலூர் மருத்துவமனைக்கு சானிடைசர் ஸ்டாண்ட் வழங்கப்பட்டது.
இவ்வாறு பல்வேறு நலப்பணிகளை வழங்கி வரும் பூதலூர் லயன்ஸ் கிளப் சார்பில்
போர்வைகள் தினவிழாவை ஒட்டி உற்றார், உறவினர்களால் கைவிடப்பட்டு வசிக்க
இருப்பிடம் இன்றி சாலையோரம், ரயில் நிலையம், பஸ் ஸ்டாப் வளாகம்
போன்றவற்றில் இரவு நேரத்தில் படுத்து உறங்கும் 30 நபர்களுக்கு போர்வைகள்
வழங்கப்பட்டன.
இதில் மாவட்ட தலைவர் திருமாறன், லயன்ஸ் சங்க தலைவர்
ஜோஸ் கொய்காரா, செயலாளர் ராஜகோபாலன், பொருளாளர் தங்க கார்த்திக் சங்க
உறுப்பினர்கள் மதியழகன், வெற்றிச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்
கடுமையான குளிர்காலத்தில் இதுபோன்ற உதவி செய்த பூதலூர் லயன்ஸ் கிளப் நிர்வாகத்தினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.