Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கைவிடப்பட்ட கிணற்றில் இருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் மீட்பு

கைவிடப்பட்ட கிணற்றில் இருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் மீட்பு

By: Nagaraj Mon, 19 Oct 2020 8:50:12 PM

கைவிடப்பட்ட கிணற்றில் இருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் மீட்பு

துப்பாக்கி, தோட்டாக்கள் மீட்பு... கைவிடப்பட்ட கிணறு ஒன்றில் இருந்து ரி-81 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மீட்கப்பட்டு, அக்கரைப்பற்று பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அம்பாறை- சாம்பல்திடல் பகுதியில் கைவிடப்பட்ட காணி ஒன்றில் இருந்த கிணற்றில், ஆயுதங்கள் இருப்பதாக புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இன்று (திங்கட்கிழமை) அவ்விடத்தை முற்றுகை இட்டனர்.

investigation,well,weapon,suspects,police ,விசாரணை, கிணறு, ஆயுதம், சந்தேக நபர்கள், பொலிஸார்

இதன்போது குறித்த கிணற்றில் இருந்து குழாய் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் ரி-81 ரக துப்பாக்கி மற்றும் 30தோட்டாக்களும் மீட்கப்பட்டன.

இவ்வாறு மீட்கப்பட்ட ஆயுதம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன், அக்கரைப்பற்று பொலிஸாரிடம் அவைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
|
|