Advertisement

நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

By: Monisha Mon, 21 Sept 2020 4:46:29 PM

நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

வடகிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதன் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-

குறைந்த காற்றழுத்த பகுதி காரணமாக கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகன மழை பெய்ய வாய்ப்புள்ளது. தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்.

மற்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 2 நாட்களுக்கு இந்த பகுதி கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
|