Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டிச.2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்... தென் தமிழகத்தில் அதி கனமழைக்கு வாய்ப்பு

டிச.2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்... தென் தமிழகத்தில் அதி கனமழைக்கு வாய்ப்பு

By: Monisha Sun, 29 Nov 2020 12:21:13 PM

டிச.2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்... தென் தமிழகத்தில் அதி கனமழைக்கு வாய்ப்பு

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் டிச.2-ந்தேதி தமிழகத்தில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் கூறியுள்ளதாவது:-

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை வலுவடைய வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்து இருக்கிறது.

இந்த நிலையில், புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற பின் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரும்.

red alert,heavy rains,tamil nadu,low pressure area,bay of bengal ,ரெட் அலர்ட்,அதி கனமழை,தமிழ்நாடு,காற்றழுத்த தாழ்வு பகுதி,வங்க கடல்

மேலும், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் டிச.2-ந்தேதி தமிழகத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் டிசம்பர் 2-ந்தேதி தென் தமிழகத்தில் அதி கனமழையும், வட தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags :