ரஷ்யா தடுப்பூசி தயாரிக்கப்படும் பிரேசிலில் தயாரிக்க ஒப்பந்தம்?
By: Nagaraj Thu, 13 Aug 2020 8:35:32 PM
தொழில்நுட்ப நிறுவனம் எதிர்பார்ப்பு... ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி, பிரேசிலில் 2021 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தயாரிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக அந்நாட்டு தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ஆனால் உலக சுகாதார நிறுவனம் இதனை முழுமையாக பரிசோதிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் ரஷ்யா கொரோனா தடுப்பூசியை பதிவு செய்த பின்னர் 100 கோடி எண்ணிக்கையில் ஆர்டர் வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பிரேசில் மற்றும் பிற லத்தீன் அமெரிக்க நாடுகளில்
தயாரிக்கவும், விநியோகிப்பதற்காகவும் ரஷ்யாவுடன் டெக்பார் என்ற பிரேசில்
தொழில்நுட்ப நிறுவனம் ஒப்பந்தமிட்டுள்ளது.
இந்த நிலையில் பிரேசில்
சுகாதார கட்டுப்பாட்டளார் அனுமதி வழங்கும் பட்சத்தில் கொரோனா
தடுப்பூசிக்கான 3ம் கட்ட பரிசோதனையில் ரஷ்யாவுடன் பங்கேற்க உள்ளதாக
டெக்பார் நிறுவனம் தெரிவித்துள்ளது.