Advertisement

பூதலூரில் சாலையோர பூங்காவிற்காக மரக்கன்று நடும் விழா

By: Nagaraj Sun, 04 Oct 2020 5:48:28 PM

பூதலூரில் சாலையோர பூங்காவிற்காக மரக்கன்று நடும் விழா

தஞ்சை மாவட்டம் பூதலூர் அரசு மருத்துவமனை அருகில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு புரட்சியாளர் அம்பேத்கர் சாலையோர பூங்காவிற்காக மரக்கன்று நடுவிழா பூதலூர் மக்கள் உரிமை கூட்டமைப்பு சார்பில் நடந்தது.

பூதலூர் வட்டாட்சியர் சிவகுமார் மரக்கன்று நடும் விழாவை துவக்கி வைத்தார். விழாவில் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் உஷா நந்தினி, ஊராட்சி மன்றத் தலைவர் தனலட்சுமி கனகசபாபதி, பூதலூர் காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ், வருமான வரி ஆய்வாளர் புவனேஸ்வரி, முதுநிலை பட்டதாரி பாலமுருகன், பூதலூர் அரிமா சங்கம் பொருளாளர் கார்த்திகேயன், ஊராட்சி மன்ற துணை தலைவர் ராமலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.

sapling,planting ceremony,government hospital,roadside park ,மரக்கன்று, நடும் விழா, அரசு மருத்துவமனை, சாலையோர பூங்கா

நிகழ்ச்சிக்கு மக்கள் உரிமை கூட்டமைப்பு தலைவர் பழ. ராஜ்குமார், தலைமை வகித்தார்.
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் மகேந்திரன், வீரசிங்கம், இளங்கோ, சுந்தரவடிவேல், பரமசிவம், அற்புதராஜ், தமிழன் காமராஜ், ரமேஷ், செந்தில், அரவிந்தன், குமார், சூர்யா, பன்னீர்செல்வம், மதியழகன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags :