Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பள்ளிகள் திறப்பு குறித்த கருத்து கேட்பு கூட்டம் நிறைவு... ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும்!

பள்ளிகள் திறப்பு குறித்த கருத்து கேட்பு கூட்டம் நிறைவு... ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும்!

By: Monisha Tue, 10 Nov 2020 08:50:58 AM

பள்ளிகள் திறப்பு குறித்த கருத்து கேட்பு கூட்டம் நிறைவு... ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும்!

கொரோனா தொற்று தற்போது குறைந்து வரும் நிலையில் பள்ளி, கல்லூரிகளை திறக்க மத்திய அரசு அனுமதியளித்தது. இதை தொடர்ந்து, தமிழகத்தில் 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வருகிற 16-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் பள்ளிகள் செயல்பட அனுமதிக்கலாம் என்று தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பை வெளியிட்டது.

இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிகளை திறக்கலாமா? பள்ளிகளை திறப்பதற்கு விடுக்கப்பட்ட அறிவிப்பை ஒத்திவைக்கலாமா? என்பது குறித்து நேற்று தமிழகம் முழுவதும் 9, 10, 11, 12-ம் வகுப்பு உள்ள அனைத்து பள்ளிகளிலும் பெற்றோரிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.

6,200 அரசு பள்ளிக்கூடங்கள், 6,300 அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களில் இந்த கருத்து கேட்பு கூட்டங்கள் நடைபெற்றன. நேற்று காலை மாணவ-மாணவிகளின் பெற்றோரிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. ஒவ்வொரு பள்ளிகளிலும் ஒவ்வொருவிதமாக கருத்துகள் கேட்கப்பட்டன.

schools,opening,opinion meeting,parents,government school ,பள்ளிகள்,திறப்பு,கருத்து கேட்பு கூட்டம்,பெற்றோர்,அரசு பள்ளி

சில பள்ளிகள் கடிதம் மூலம் தங்கள் கருத்துகளை எழுதிவந்து ஒப்படைக்க அறிவுறுத்தி இருந்தன. சில பள்ளிகள் பள்ளிகளை திறந்தால் பிள்ளைகளை அனுப்புவீர்களா?, அனுப்பமாட்டேன் என்றால் அதற்கான காரணத்தை கூறவும் என்றும், சில பள்ளிகள் பள்ளிகளை திறக்கலாமா?, திறப்பதை ஒத்திவைக்கலாமா?, அதற்கான காரணம் என்ன? என்றும் கேட்டு இருந்தனர்.

அதனை படித்து பெற்றோர் தங்களுடைய கருத்துகளை பதிவு செய்தனர். தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் பெற்றோரிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளை ஒவ்வொரு பள்ளிகளும் பட்டியலிட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தெரிவித்தனர். அதில் பள்ளிகளை திறக்க சம்மதம் தெரிவித்தவர்கள் எத்தனை பேர்?, சம்மதிக்காதவர்கள் எத்தனை பேர்? என்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன. முதன்மை கல்வி அலுவலர்கள் அந்த பட்டியலை ஆராய்ந்து, அவர்கள் பள்ளிக்கல்வி இயக்குனருக்கு அந்த விவரங்களை தெரிவித்தனர். அவர் அதனை பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளருக்கு சமர்ப்பிக்கிறார்.

பள்ளி கல்வித்துறை செயலாளர் தமிழக அரசிடம் தெரிவித்த பின், பெற்றோரின் கருத்துகளின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகளை தமிழக அரசு ஓரிரு நாட்களில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :