Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கல்வி அலுவலகங்களில் சுதந்திர தினவிழாவை எளிமையாக கொண்டாட வேண்டும்; பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவிப்பு

கல்வி அலுவலகங்களில் சுதந்திர தினவிழாவை எளிமையாக கொண்டாட வேண்டும்; பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவிப்பு

By: Monisha Sat, 01 Aug 2020 5:48:45 PM

கல்வி அலுவலகங்களில் சுதந்திர தினவிழாவை எளிமையாக கொண்டாட வேண்டும்; பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவிப்பு

அனைத்து கல்வி அலுவலகங்களிலும் சுதந்திர தினவிழாவை எவ்வாறு கொண்டாட வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன், அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

நாட்டின் 74-வது சுதந்திர தினவிழாவினை வருகிற 15-ந்தேதியன்று அனைத்து முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள், அனைத்து கல்வி அலுவலகங்கள், அனைத்துவகை பள்ளிகளிலும் சமூக இடைவெளியை பின்பற்றி எளிமையான முறையில் கொண்டாடவேண்டும்.

schools,independence day,social space,face mask,cleaning staff ,கல்வி அலுவலகம்,சுதந்திர தினவிழா,சமூக இடைவெளி,தூய்மை பணியாளர்கள்

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையின் முன்களப்பணியாளர்களாக செயல்படும் டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களின் சேவையினை பாராடும் பொருட்டு அவர்களை சுதந்திர தினவிழாவுக்கு அழைத்து சிறப்பிக்கவேண்டும். அதேபோல், கொரோனா தொற்று ஏற்பட்டு தற்போது பூரண குணம் அடைந்தவர்களையும் விழாவுக்கு அழைக்கலாம்.

இந்த விழாவில் சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். முகக்கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும். அதிகளவு கூட்டங்களை தவிர்க்கவேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :