Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தனியார் பரிசோதனை மையத்திற்கு சீல்; ரூ.5 லட்சம் அபராதமும் விதித்தார் கலெக்டர்

தனியார் பரிசோதனை மையத்திற்கு சீல்; ரூ.5 லட்சம் அபராதமும் விதித்தார் கலெக்டர்

By: Nagaraj Wed, 29 July 2020 12:29:02 PM

தனியார் பரிசோதனை மையத்திற்கு சீல்; ரூ.5 லட்சம் அபராதமும் விதித்தார் கலெக்டர்

திருச்சியில் கொரோனா பரிசோதனையில் தவறான தகவல்கள் கொடுத்ததால் தனியார் பரிசோதனை மையத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

திருச்சியில் உள்ள டாக்டர்ஸ் டயக்னாஸ்டிக் சென்டர் கொரோனா நோயாளிகளுக்குத் தவறான தகவல்களை அளித்ததால், அந்தப் பரிசோதனை மையத்துக்கு ஆட்சியர் சீல் வைத்ததோடு, ஐந்து லட்ச ரூபாய் அபராதமும் விதித்திருக்கிறார். திருச்சி உறையூரில் டாக்டர்ஸ் டயக்னாஸ்டிக் சென்டர் என்கிற பரிசோதனை மையம் செயல்பட்டு வந்தது. திருச்சியில் உள்ள 15-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இணைந்து இந்தப் பரிசோதனை மையத்தை நடத்தி வருகிறார்கள்.

இங்கு ரத்த டெஸ்ட், ஸ்கேன் மற்றும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கொரோனா டெஸ்ட் இந்தப் பரிசோதனை மையத்தில் எடுக்கப்பட்டு வந்தது. இங்கு டெஸ்ட் எடுக்கவரும் மக்களிடம் முடிவுகளைத் தாமதமாக அறிவிப்பதாகவும், அப்படி அறிவிக்கும் பரிசோதனை முடிவுகள் தவறாக இருப்பதாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

testing center,fine,seal deposit,license revocation ,பரிசோதனை மையம், அபராதம், சீல் வைப்பு, உரிமம் ரத்து

குறிப்பாக, இந்த சென்டரில் பரிசோதனை மேற்கொண்டால் கொரோனா இல்லாதவர்களுக்கும் கொரோனா இருப்பதாக பாசிட்டிவ் என ரிசல்ட் கொடுத்திருக்கிறார்கள். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பரிசோதனை கூடத்தை சுகாதாரத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். பின்னர், இந்தக் கட்டடம் விதிமுறைகளை மீறி அனுமதி பெறாமல் கட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவின்பேரில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் இந்தப் பரிசோதனையை மையத்தையும், அது செயல்பட்டு வந்த நான்கு மாடிக் கட்டடத்துக்கும் சீல் வைத்தனர்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் சிவராசு கூறுகையில், “கொரோனா டெஸ்ட் எடுக்க வரும் பொதுமக்களுக்குப் பரிசோதனை முடிவுகளைக் காலம் தாழ்த்தி தாமதமாகப் பரிசோதனை முடிவுகளை வழங்கியிருக்கிறார்கள். இதனால், நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை வழங்க முடியாமல் போனதால் பல பிரச்சினைகளைச் சந்தித்தாகத் தகவல் வந்தது.

இதுதொடர்பாக அந்த டயக்னாஸ்டிக் சென்டருக்கு ஐந்து முறை நோட்டீஸ் அளிக்கப்பட்டது. அதற்குரிய பதில் அளிக்காததால் கோவிட் பரிசோதனை மையத்தின் உரிமையை ரத்து செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. விதிமுறை மீறி இந்தக் கட்டடம் கட்டப்பட்டுள்ளதால் கட்டடத்தையும் சீல் வைக்க உத்தரவிட்டுள்ளேன். அதோடு ஐந்து லட்சம் ரூபாய் அபராதத்தையும் விதித்திருக்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

Tags :
|