துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை
By: Nagaraj Thu, 10 Sept 2020 7:45:20 PM
2 பேர் கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை... கனடாவில் இரண்டு பேர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான தகவலை பெற நபர் ஒருவரை பொலிசார் தேடி வருகின்றனர்.
கல்கரியை சேர்ந்த முகமது காலித் ஷேக் (19) மற்றும் அப்பாஸ் அகமது இப்ராஹிம் (27) ஆகிய இருவரும் கடந்த மாதம் 28ஆம் திகதி சுட்டு கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் இரண்டு பேரை கைது செய்துள்ளனர். இந்த
நிலையில் கொலை குறித்து முக்கிய விடயத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி
ஜோர்டான் ஜே வார்டு என்ற 20 வயது இளைஞனுக்கு கொலை தொடர்பில் சில முக்கிய
தகவல்கள் தெரியும் என பொலிசார் நம்புகிறனர். இதையடுத்து அவரை தேடி வரும்
பொலிசார், அவர் குறித்து தகவல் தெரிந்தால் எங்களிடம் தெரிவிக்கலாம் என
கூறியுள்ளனர்.
Tags :
police |
youth |