Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முல்லைத்தீவில் கடைகள் அடைத்து மாவீரர் தினம் அனுஷ்டிப்பு

முல்லைத்தீவில் கடைகள் அடைத்து மாவீரர் தினம் அனுஷ்டிப்பு

By: Nagaraj Fri, 27 Nov 2020 10:24:24 PM

முல்லைத்தீவில் கடைகள் அடைத்து மாவீரர் தினம் அனுஷ்டிப்பு

கடைகள் மூடப்பட்டன... மாவீரர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு நகர் மற்றும் புதுக்குடியிருப்பு நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) வணிக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக மக்களால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மூடப்பட்டுள்ள வர்த்தக நிலையங்களை உடனடியாக திறக்குமாறு வலியுறுத்தி, பலவந்தமாக திறக்கும் நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஈடுபட்டு வருவதாக வர்த்தகர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். மேலும், முல்லைத்தீவு நகரிலுள்ள இஸ்லாமிய சகோதரர்களும் கடைகளைப் பூட்டியே இருந்தனர். முல்லைத்தீவு மாத்திரமின்றி புதுக்குடியிருப்பிலும் விற்பனை நிலையங்களில் பெரும்பாலானவை திறக்கப்பட்டிருக்கவில்லை.

Tags :