Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்த நாட்டில் மோடி மட்டுமே நடக்க வேண்டுமா? நாங்கள் நடக்கக் கூடாதா? - ராகுல் காந்தி ஆவேசம்

இந்த நாட்டில் மோடி மட்டுமே நடக்க வேண்டுமா? நாங்கள் நடக்கக் கூடாதா? - ராகுல் காந்தி ஆவேசம்

By: Karunakaran Thu, 01 Oct 2020 7:21:32 PM

இந்த நாட்டில் மோடி மட்டுமே நடக்க வேண்டுமா? நாங்கள் நடக்கக் கூடாதா? - ராகுல் காந்தி ஆவேசம்

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயதான பட்டியல் இன இளம்பெண், கடந்த மாதம் 14-ம் தேதி அங்குள்ள நிலத்தில் புல் அறுத்துக் கொண்டிருந்தபோது, அக்கிராமத்தை சேர்ந்த உயர் ஜாதி இளைஞர்கள் 4 பேர், அந்த பெண்ணை தூக்கிச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். மேலும், அப்போது, பெண்ணை கடுமையாக தாக்கி, வெளியில் சொல்லக்கூடாது என்பதற்காக, நாக்கையும் அறுத்ததாக கூறப்படுகிறது.

பின்னர் படுகாயங்களுடன் கிடந்த அந்த பெண்ணை மீட்டு ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இளைஞர்கள் தாக்கியதில், அப்பெண்ணுக்கு முதுகு தண்டுவடம் நொறுங்கி இருப்பதும், பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள சப்தர்ஜங் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டநிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார்.

modi,country,walk,rahul gandhi ,மோடி, நாடு, நடை, ராகுல் காந்தி

இந்த சம்பவத்தை அடுத்து, டெல்லியிலும், உத்தர பிரதேசத்திலும் போராட்டங்கள் வெடித்தன. அரசியல்வாதிகள், திரையுலகினர், விளையாட்டுத் துறையினர் என பல்வேறு தரப்பினரும் நீதி கேட்டு குரல் கொடுத்தனர். கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்ட 4 இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் பிரியங்கா காந்தி வதேரா மற்றும் சகோதரர் ராகுல் காந்தி ஆகியோர் இன்று ஹத்ராஸ் கும்பலால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்றனர்.

அப்போது அவர்களது வாகனத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் யமுனா விரைவு நெடுஞ்சாலையில் தொண்டர்களுடன் பிரியங்கா காந்தி, ராகுல்காந்தி நடந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. தற்போது, தடையை மீறி ஹத்ராஸ் நோக்கி செல்ல முயன்ற ராகுல் காந்தியை கைது செய்துள்ளனர். இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்த நாட்டில் மோடி மட்டுமே நடக்க வேண்டுமா? நாங்கள் நடக்கக் கூடாதா? என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags :
|
|