Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தந்தையை அடித்து கொலை செய்த மகன் கைது - ராமேசுவரத்தில் பரபரப்பு

தந்தையை அடித்து கொலை செய்த மகன் கைது - ராமேசுவரத்தில் பரபரப்பு

By: Monisha Sun, 28 June 2020 10:31:54 AM

தந்தையை அடித்து கொலை செய்த மகன் கைது - ராமேசுவரத்தில் பரபரப்பு

ராமேசுவரத்தில் சவுக்கு கட்டையால் தந்தையை அடித்து கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்த விரிவான தகவல் வருமாறு:-

ராமேசுவரம் எம்.ஆர்.டி.நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (வயது 49). இவருக்கு சதீஷ்குமார் (24), இருளேசுவரன்(22) என்று இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று சதீஷ்குமாருக்கும், இருளேசுவரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அவர்களது தந்தை சந்திரன் கண்டுகொள்ளவில்லையாம்.

rameswaram,father,son,murder,arrested ,ராமேசுவரம்,தந்தை,மகன்,கொலை,கைது

இதனால் ஆத்திரமடைந்த இருளேசுவரன் தனது தந்தையிடம் ஏன் தட்டிக்கேட்கவில்லை என சத்தம் போட்டாராம். அப்போது சந்திரன் கம்பால் இருளேசுவரனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர் அருகில் கிடந்த சவுக்கு கட்டையால் தந்தை என்றும் பாராமல் சந்திரனை சரமாரியாக தாக்கினாராம். இதில் படுகாயமடைந்த சந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் திலகராணி, சப்-இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் போலீசார் அங்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து இருளேசுவரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags :
|
|
|