Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரத்து செய்யப்பட்ட டிக்கெட் கட்டணத்தை திரும்பபெற 6 மாதம் அவகாசம் என தெற்கு ரயில்வே அறிவிப்பு

ரத்து செய்யப்பட்ட டிக்கெட் கட்டணத்தை திரும்பபெற 6 மாதம் அவகாசம் என தெற்கு ரயில்வே அறிவிப்பு

By: Monisha Thu, 26 Nov 2020 10:43:30 AM

ரத்து செய்யப்பட்ட டிக்கெட் கட்டணத்தை திரும்பபெற 6 மாதம் அவகாசம் என தெற்கு ரயில்வே அறிவிப்பு

வங்க கடலில் உருவாகி உள்ள நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களுக்கான டிக்கெட் கட்டணத்தை திரும்பபெற 6 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும் ரத்து செய்யப்பட்ட ரயில் டிக்கெட்களுக்கான கட்டணத்தை திரும்ப பெற பயணிகள் யாரும் அவசரமாக ரயில் நிலையம் வரவேண்டாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

storm,train,ticket,cancellation,fare ,புயல்,ரயில்,டிக்கெட்,ரத்து,கட்டணம்

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- இந்த ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான டிக்கெட்டுகளுக்கான கட்டணம் முழுவதுமாக திருப்பி அளிக்கப்படும். டிக்கெட் கட்டணத்தை திரும்பப்பெற 6 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இணையதள முன்பதிவு டிக்கெட் தானாகவே ரத்து செய்யப்பட்டு வங்கி கணக்கில் திருப்பி செலுத்தப்படும். முன்பதிவு மையங்களில் பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் ரத்து செய்வதற்கு 6 மாத கால அவகாசம் உள்ளது. எனவே பயணிகள் யாரும் அவசரமாக டிக்கெட்டை ரத்து செய்ய ரயில்வே முன்பதிவு டிக்கெட் கவுண்ட்டர்களுக்கு வரவேண்டாம் என அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|
|
|