Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பண்டிகைக்கால ஏழு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

பண்டிகைக்கால ஏழு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

By: Monisha Sat, 12 Dec 2020 2:00:04 PM

பண்டிகைக்கால ஏழு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

கொரோனா பாதிப்பு காரணமாக பயணிகள் ரெயில் சேவை மார்ச் 24-ம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னர் சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. பயணிகளின் கோரிக்கைக்கு ஏற்ப முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்து வருகிறது. மேலும் வரும் நாட்களில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகைகள் வருகின்றன. இதனால் சென்னையில் இருந்தும் பிற நகரங்களில் இருந்தும் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்ய மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

கொரோனா தொற்று பரவல் இருப்பதால் முன்பதிவு அல்லாத டிக்கெட்டுகள் வழங்கப்படவில்லை. இதனால் பயணம் உறுதி செய்யப்பட்டவர்கள் மட்டும்தான் ரயிலில் செல்லமுடியும் என்ற நிலை தற்போது வரை நீடிக்கிறது. இந்த நிலையில் பண்டிகைகள் நெருங்கி வருவதால் ரயில்களில் முன்பதிவு அதிகரித்து வருகிறது. சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்லக்கூடிய ரயில்களில் இடங்கள் நிரம்பி வருகின்றன.

இதனை கருத்தில் கொண்டு மேலும் ஏழு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து வருகிற 14-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை தினசரி இரவு 9.15 மணிக்கு சிறப்பு கட்டண ரயில்(06021) புறப்பட்டு மறுநாள் காலை 6.30 மணிக்கு மைசூர் செல்கிறது. மறுமார்க்கமாக மைசூரில் இருந்து வருகிற 15-ம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி வரை தினசரி இரவு 9.00 மணிக்கு சிறப்பு ரயில்(06022) புறப்பட்டு மறுநாள் காலை 6.40 மணிக்கு சென்டிரல் வந்து சேருகிறது.

corona,festival,special train,passenger,booking ,கொரோனா,பண்டிகைக்காலம்,சிறப்பு ரயில்,பயணிகள்,முன்பதிவு

திருநெல்வேலியில் இருந்து 13, 20, 27 ஆகிய தேதிகளில் மதியம் 1.15 மணிக்கு சிறப்பு ரயில்(06070) புறப்பட்டு இரண்டாம் நாள் இரவு 9.35 மணிக்கு சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரை சென்றடையும். மறுமார்க்கமாக பிலாஸ்பூரிலிருந்து வருகிற 15, 22, 29 ஆகிய தேதிகளில் காலை 8.15 மணிக்கு சிறப்பு ரயில்(06069) புறப்பட்டு மூன்றாம் நாள் அதிகாலை 3.15 மணிக்கு திருநெல்வேலியை அடையும்.

திருநெல்வேலியிலிருந்து வருகிற 16, 23, 30 ஆகிய தேதிகளில் காலை 7.15 மணிக்கு வாராந்திர சிறப்பு கட்டண ரயில்(06072) புறப்பட்டு இரண்டாம் நாள் பிற்பகல் 3.00 மணிக்கு மும்பை தாதரை சென்றடையும். மறுமார்க்கமாக தாதரில் இருந்து வருகிற 17, 24, 31 ஆகிய தேதிகளில் இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு (06071) புறப்பட்டு மூன்றாம் நாள் அதிகாலை 4.00 மணிக்கு திருநெல்வேலியை அடையும். இதுதவிர மங்களூர் சென்ட்ரல்-மும்பை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தற்போது தொடங்கி விட்டது.

Tags :
|