Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை எழும்பூரில் இருந்து தஞ்சை, கொல்லம், திருச்சி இடையே சிறப்பு ரெயில்கள்

சென்னை எழும்பூரில் இருந்து தஞ்சை, கொல்லம், திருச்சி இடையே சிறப்பு ரெயில்கள்

By: Monisha Sat, 24 Oct 2020 09:15:04 AM

சென்னை எழும்பூரில் இருந்து தஞ்சை, கொல்லம், திருச்சி இடையே சிறப்பு ரெயில்கள்

சென்னை எழும்பூரில் இருந்து தஞ்சை, கொல்லம், திருச்சி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னையில் இருந்து திருச்சி, தஞ்சை, கொல்லம் பகுதிகளுக்கு சிறப்பு ரெயில்கள் வரும் 26-ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளதாகவும், இதற்கான முன்பதிவு 24-ம் தேதி காலை 8 மணி முதல் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து அக்டோபர் 25-ம் தேதி மாலை 5 மணிக்கு புறப்படும் ரெயில் மறுநாள் காலை 8.45 மணிக்கு கொல்லம் சென்றடையும். கொல்லத்தில் இருந்து அக்டோபர் 26-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு புறப்படும் ரெயில் மறுநாள் 3.05 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

chennai egmore,tanjore,kollam,trichy,special trains ,சென்னை எழும்பூர்,தஞ்சை, கொல்லம், திருச்சி,சிறப்பு ரெயில்கள்

திருச்சியில் இருந்து அக்டோபர் 26- ம் தேதி இரவு 10.45 மணிக்கு புறப்படும் ரெயில் மறுநாள் காலை 4.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். சென்னை எழும்பூரில் இருந்து அக்டோபர் 27-ம் தேதி இரவு 11.15 மணிக்கு புறப்படும் ரெயில் மறுநாள் காலை 4.45 மணிக்கு திருச்சி சென்றடையும்.

தஞ்சாவூரில் இருந்து அக்டோபர் 26-ம் தேதி இரவு 9.50க்கு புறப்படும் ரெயில் அடுத்த நாள் காலை 4.30 மணிக்கு சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தை அடையும். சென்னை எழும்பூரில் இருந்து அக்டோபர் 27-ம் தேதி இரவு 11.55 மணிக்கு புறப்படும் ரெயில் அடுத்த நாள் காலை 6 மணிக்கு தஞ்சாவூர் சென்றடையும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|