Advertisement

பிரியாணி, புரோட்டா சாப்பிட்ட சிறுவன் திடீர் மரணம்

By: Nagaraj Sat, 12 Sept 2020 8:57:21 PM

பிரியாணி, புரோட்டா சாப்பிட்ட சிறுவன் திடீர் மரணம்

சிறுவன் திடீர் மரணம்... சென்னை துரைப்பாக்கம் ஆர்.இ.நகரைச் சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகன் தினேஷ் நேற்று இரவு பிரியாணி மற்றும் பரோட்டா சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

உணவு அருந்திய சிறிது நேரத்தில் சிறுவனுக்கு திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பெற்றோர் சிறுவனை அழைத்து சீவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பார்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினர்.

வீடு திரும்பிய பின்னர் சிறிது நேரம் கழித்து சிறுவனுக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து தினேஷை அவரது பெற்றோர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் சிறுவன் வழியில் மயங்கியதால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

boy,biryani,fatality,police,investigation ,சிறுவன், பிரியாணி, உயிரிழப்பு, போலீசார், விசாரணை

மேலும் சிறுவனை மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் வழியிலேயே தினேஷ் உயிரிழந்து விட்டதாக கூறினர். இதனால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.

இதனிடையே சிறுவன் உயிரிழப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர். சிறுவனின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே, இறப்புக்கான உண்மைக் காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags :
|
|