Advertisement

டிக்டாக் நிறுவன தலைமை நிர்வாகி திடீர் ராஜினாமா

By: Nagaraj Thu, 27 Aug 2020 3:03:25 PM

டிக்டாக் நிறுவன தலைமை நிர்வாகி திடீர் ராஜினாமா

திடீர் ராஜினாமா... இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக்டாக் தடை செய்யப்படவுள்ள நிலையில் அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கெவின் மேயர் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இந்தியா - சீனா எல்லை மோதலை தொடர்ந்து இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி சீனாவை சேர்ந்த டிக் டாக், ஹலோ உள்ளிட்ட 59 மொபைல் செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, சீன உளவுத்துறையின் ஒரு கருவியாக இருக்கக்கூடும் என்றும் தேசிய பாதுகாப்பைக் கருதியும் அமெரிக்காவும் டிக் டாக் செயலியைத் தடை செய்ய முடிவு செய்தது.

அதன்படி இதனை தொடர்ந்து டிக்டாக் மற்றும் வீ சாட் ஆகிய சீன செயலிகள் அடுத்த 90 நாட்களுக்குள் அமெரிக்காவில் தடை விதிக்கப்படும் என அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஆனால் அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்த டிக்டாக்கின் தாய் நிறுவனமான Byte Dance "டிக்டோக்கின் அமெரிக்க பயனர் தரவின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய அசாதாரண நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்" என தெரிவித்துள்ளது.

resignation,executive officer,tictak,usa,prohibition ,ராஜினாமா, நிர்வாக அதிகாரி, டிக்டாக், அமெரிக்கா, தடை

மேலும் அமெரிக்காவில் டிக்டாக் தடை விதிக்கப்பட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் அந்நிறுவனம் எச்சரித்திருந்தது. இதனை தொடர்ந்து அமெரிக்க நீதிமன்றங்களில் Byte Dance டிக்டாக் தடைக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளது.

இந்நிலையில் டிக்டாக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கெவின் மேயர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தில், நான் ஒரு கனத்த இதயத்தோடு தான் நிறுவனத்தை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளேன் என்பதை உங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார். மேலும் டிக்டோக் பொது மேலாளர் வனேசா பப்பாஸ் இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பார் என தெரிவித்துள்ளார்.

Tags :
|
|