ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதலில் 25 வீரர்கள் பலி
By: Nagaraj Wed, 21 Oct 2020 8:08:09 PM
தலிபான்கள் தாக்குதல்... ஆப்கானிஸ்தான் நாட்டின் வடகிழக்கில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 25 ஆப்கானிய பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
“சண்டை இன்னும் தொடர்கிறது. மேலும் தலிபான்களும் பலத்த உயிரிழப்புகளை சந்தித்துள்ளனர்” என்று தகார் மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் ஜவாத் ஹெஜ்ரி தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தை தகார் மாகாண சுகாதார இயக்குனர் அப்துல் கயூம் உறுதிப்படுத்தினார். ஆனால் மாகாணத்தின் துணை போலீஸ் தலைவர் உட்பட 34 பாதுகாப்பு வீரர்கள் கொல்லப்பட்டதாக கூறினார். “இந்த பாதுகாப்புப் படைகள் தலிபான்களால் தாக்கப்பட்டபோது மாவட்டத்தில் ஒரு நடவடிக்கைக்காக சென்று கொண்டிருந்தன” என்று ஹெஜ்ரி கூறினார்.
தலிபான்கள் அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள வீடுகளில் மறைந்திருந்து
பாதுகாப்புப் படையினர் வந்தபோது தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளனர். எனினும்
இந்த தாக்குதல் குறித்து தலிபான்கள் இதுவரை எந்த கருத்தும்
தெரிவிக்கவில்லை.
கத்தாரில் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கும்
தலிபானுக்கும் இடையில் சமாதான பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில்
இந்த தாக்குதல் நடைபெற்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக
பார்க்கப்படுகிறது.