Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகம்-ஆந்திரா இடையே மீண்டும் பஸ் சேவை... 25-ந்தேதி துவங்குகிறது!

தமிழகம்-ஆந்திரா இடையே மீண்டும் பஸ் சேவை... 25-ந்தேதி துவங்குகிறது!

By: Monisha Mon, 23 Nov 2020 2:46:18 PM

தமிழகம்-ஆந்திரா இடையே மீண்டும் பஸ் சேவை... 25-ந்தேதி துவங்குகிறது!

கொரோனா வைரஸ் பரவல் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் தொடர்ச்சியாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கும், கர்நாடக மாநிலத்துக்கும் இ-பாஸ் இல்லாமல் பயணிக்கும் வகையில் பொதுப்போக்குவரத்து சேவை ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டது.

இதேபோல் தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு பஸ் போக்குவரத்து சேவையை தொடங்கவேண்டும் என்று ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

tamil nadu,andhra pradesh,bus service,curfew,transport ,தமிழகம்,ஆந்திரா,பஸ் சேவை,ஊரடங்கு,போக்குவரத்து

இதனையடுத்து, தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு பொது மற்றும் தனியார் பஸ் போக்குவரத்துக்கு அனுமதி அளித்துள்ளது. இதன்படி, வருகிற 25-ந்தேதி முதல் தமிழகம் மற்றும் ஆந்திரா இடையே பொது மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து சேவையை தொடங்க அனுமதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதனால் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழகம்-ஆந்திரா இடையே மீண்டும் பஸ் சேவை தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|