Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டாஸ்மாக் பணியாளர்கள் நாளை முதல் 21-ந் தேதி வரை ஆர்ப்பாட்டம்!

டாஸ்மாக் பணியாளர்கள் நாளை முதல் 21-ந் தேதி வரை ஆர்ப்பாட்டம்!

By: Monisha Sun, 16 Aug 2020 6:19:32 PM

டாஸ்மாக் பணியாளர்கள் நாளை முதல் 21-ந் தேதி வரை ஆர்ப்பாட்டம்!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்களின் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நாளை முதல் 21-ந் தேதி வரை டாஸ்மாக் கடைகள் முன்பு காலை 9 மணி முதல் 10 மணி வரை ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா அதிகமாக பரவி வருகிற நிலையில் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் தொற்று ஏற்பட்டு வருகிறது. டாஸ்மாக் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும், மருத்துவ செலவினை டாஸ்மாக் நிர்வாகம் முழுமையாக ஏற்க வேண்டும், கொரோனாவால் உயிரிழந்த டாஸ்மாக் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை டாஸ்மாக் பணியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

tasmac,employees,demonstration,demands,strike ,டாஸ்மாக்,பணியாளர்கள்,ஆர்ப்பாட்டம்,கோரிக்கைகள்,வேலை நிறுத்தம்

இந்த நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்களின் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நாளை (திங்கட்கிழமை) முதல் 21-ந் தேதி வரை டாஸ்மாக் கடைகள் முன்பு காலை 9 மணி முதல் 10 மணி வரை ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக டாஸ்மாக் பணியாளர்கள் தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 25-ந் தேதி 2 மணி நேரம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக கூறினர்.

Tags :
|