பாஜக போட்ட அதிரடியால் அதிர்ச்சியில் உள்ள தேமுதிக தலைமை
By: Nagaraj Thu, 03 Dec 2020 3:58:47 PM
தேமுதிகவை புறந்தள்ளிய பா.ஜ.,... தேர்தலுக்கு தேர்தல், பேரத்தை அதிகரித்து வரும் தே.மு.தி.க.,வை, இம்முறை, பா.ஜ., தொங்கலில் விட்டுள்ளது.
தே.மு.தி.க.,வுடன் கூட்டணி வைப்பதற்கு, அ.தி.மு.க., - தி.மு.க., இடையே போட்டி ஏற்படுவது வழக்கம். இதை பயன்படுத்தி, இரண்டு கட்சிகளிடமும், தே.மு.தி.க., பேரம் நடத்தும். கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைத்த ஜெயலலிதா, அதே ஆண்டு உள்ளாட்சி தேர்தலில், அக்கட்சியை 'கழற்றி' விட்டார்.
'இனி எப்போதும், தே.மு.தி.க., வுடன் கூட்டணி கிடையாது' என்றும், ஜெயலலிதா அறிவித்தார். அவரது மறைவிற்கு பின் நடந்த லோக்சபா தேர்தலில், தே.மு.தி.க., வுடன், அ.தி.மு.க., மீண்டும் கூட்டணி அமைத்தது.
இக்கூட்டணி தேர்தலில் படுதோல்வி அடைந்தது. அதையடுத்து, அ.தி.மு.க.,வினர்,
தே.மு.தி.க., உறவை விரும்பவில்லை என்பது வெளிச்சமாகியது.இந்நிலையில்,
அ.தி.மு.க., கூட்டணியில் தொடர்வதாக, தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா கூறி
வருகிறார்.
கூட்டணியில் அதிக, 'சீட்'களை பெறுவதற்காக,
பா.ஜ.,விடமும் தொடர்ந்து, தே.மு.தி.க., பேச்சு நடத்தி வந்தது. சமீபத்தில்
சென்னை வந்த, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேச, பிரேமலதா,
சுதீஷ் ஆகியோர், தீவிர முயற்சி செய்தனர். இந்த சந்திப்பை தவிர்த்த அமித்
ஷா, கூட்டணி தொடர்பாக, அ.தி.மு.க., தலைமையிடம் பேசுமாறு கூறிவிட்டதாக,
தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமின்றி, 'தேவைப் பட்டால்,
தே.மு.தி.க.,வை சேர்த்துக் கொள்ளுங்கள்' எனவும், அ.தி.மு.க., தலைமையிடம்,
அமித் ஷா கூறியதாக தெரிகிறது. இதனால், என்ன செய்வது என தெரியாமல்,
தே.மு.தி.க., தலைமை அதிர்ச்சியில் உறைந்துஉள்ளது.