Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விரிவாக்கம் செய்த புதிய பாதையில் மெட்ரோ ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம்

விரிவாக்கம் செய்த புதிய பாதையில் மெட்ரோ ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம்

By: Monisha Mon, 28 Dec 2020 08:20:27 AM

விரிவாக்கம் செய்த புதிய பாதையில் மெட்ரோ ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம்

சென்னை வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் விம்கோ நகர் இடையே நடைபெற்ற மெட்ரோ ரெயில் விரிவாக்கப்பணிகள் தற்போது முடிக்கப்பட்டு உள்ளது. இந்த மெட்ரோ ரெயில் பாதையில் தியாகராஜர் கல்லூரி, தண்டையார்பேட்டை ஆகிய 2 ரெயில் நிலையங்கள் சுரங்கப்பாதையிலும், புதுவண்ணாரப்பேட்டை, சுங்கச்சாவடி, காலடிப்பேட்டை, திருவொற்றியூர் தேரடி, திருவொற்றியூர், விம்கோநகர் ஆகிய 6 ரெயில் நிலையங்கள் உயர்த்தப்பட்ட பாதையிலும் அமைக்கப்பட்டு உள்ளன.

பணிகள் முடிக்கப்பட்ட இந்த ரெயில் பாதையில் நேற்றுமுன்தினம் டீசல் என்ஜினை இயக்கி தண்டவாளத்தின் உறுதி தன்மை ஆய்வு செய்யப்பட்டது. இந்த சோதனை வெற்றி பெற்றதை தொடர்ந்து, இந்த பாதையில் நேற்று மெட்ரோ ரெயிலை இயக்கி அதிகாரிகள் சோதனை ஓட்டம் நடத்தினர். சுரங்கம் மற்றும் உயர்த்தப்பட்ட பாதையில் உள்ள ரெயில் நிலையங்களில் ரெயிலை நிறுத்தியும், தொடர்ந்து இயக்கியும் சோதனை செய்தனர். இந்த சோதனை வெற்றிகரமாக இருந்ததாக அதிகாரிகள் கூறினார்கள்.

expansion,metro rail,test run,transport,washermanpet ,விரிவாக்கம்,மெட்ரோ ரெயில்,சோதனை ஓட்டம்,போக்குவரத்து,வண்ணாரப்பேட்டை

தற்போது ஒரு சில உயர்த்தப்பட்ட ரெயில் நிலையங்களில் மேற்கூரை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஜனவரி முதல் வாரம் வரை இந்தபாதையில் மெட்ரோ ரெயிலை தினசரி இயக்கி சோதனை நடத்தப்படும். அதில் ஏதேனும் குறைபாடுகள் தெரியவந்தால் நிவர்த்தி செய்யப்படும். ஜனவரியில் ரெயில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வுக்கு பிறகு ஜனவரி இறுதியில் இந்த பாதையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தொடங்க வாய்ப்பு உள்ளது.

இதனால் திருவொற்றியூர் விம்கோ நகரில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு சராசரியாக ஒரு மணி நேரத்தில் ஒரே ரெயிலில் சென்றுவிட முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :