Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று அன்றே நான் எச்சரித்தேன் - ராகுல் காந்தி

பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று அன்றே நான் எச்சரித்தேன் - ராகுல் காந்தி

By: Karunakaran Wed, 26 Aug 2020 12:45:03 PM

பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று அன்றே நான் எச்சரித்தேன் - ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி கொரோனா பரவ ஆரம்பித்தத்திலிருந்தே கொரோனா வைரஸ் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தும். நோய் மட்டுமல்ல பொருளாதார சீரழிவு ஏற்படும் என்று எச்சரித்துக் கொண்டே இருந்தார். ஆனால் மத்திய அரசு அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.

ஏழைகளுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்பட வேணடும் என்பது காங்கிரஸ் கட்சியின் முதன்மை கோரிக்கையையும், மத்திய அரசு ஏற்கவில்லை. இதனால் பொதுமுடக்கம் காலத்தில் ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நீண்ட காலம் ஆகும். ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

congress,warning,economic crisis,rahul gandhi ,காங்கிரஸ், எச்சரிக்கை, பொருளாதார நெருக்கடி, ராகுல் காந்தி

இந்நிலையில் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், பல மாதங்களுக்கு முன் நான் எச்சரித்தது என்னவோ? அதை இன்று ஆர்பிஐ உறுதிப்படுத்தியுள்ளது. அதிகமாக செலவு செய்யுங்கள், கடன் கொடுக்காதீர்கள். ஏழைகளுக்கு பணம் கொடுங்கள். தொழிலதிபர்களுக்கு வரி குறைப்பு செய்யாதீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர், நுகர்வு மூலம் பொருளாதாரத்தை மறுதொடக்கம் செய்யுங்கள். மீடியா மூலம் திசைதிருப்புவதன் மூலம் ஏழை மக்களுக்கு உதவ முடியாது அல்லது பொருளாதார சீரழிவை மறைத்துவிட முடியாது என்று தெரிவித்துள்ளார். கொரோனா பரவலுக்கு பின் வேலையின்மை, மற்றும் ஏழை மக்கள் அதிகமாக பாதிக்கபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :