கைதான சிவாஜிலிங்கம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்
By: Nagaraj Wed, 16 Sept 2020 4:21:17 PM
நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட சிவாஜிலிங்கம்...
தடைகளை மீறி தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று (புதன்கிழமை) யாழ்.நீதவான் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரம் நேற்றைய தினம் ஆரம்பமான நிலையில், குறித்த நினைவேந்தல் நிகழ்வினை யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவில் நடத்த விடாது யாழ்.நீதவான் நீதிமன்றில் தடையுத்தரவை பொலிஸார் பெற்றிருந்தனர்.
இந்நிலையில் தடைகளை தாண்டி எம்.கே.சிவாஜிலிங்கம் நேற்றைய தினம் காலை தியாக
தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய போது பொலிஸாரினால் கைது
செய்யப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் காலை கைது செய்யப்பட்டவரை நேற்று
முழுவதும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த பொலிஸார்
இன்று (புதன்கிழமை) காலையே யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்த அழைத்து
வந்துள்ளனர்.