Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோவையில் சிறுவன் தாக்கப்பட்ட விவகாரம்: இரண்டு வாரத்தில் பதில் அளிக்க நோட்டீஸ்

கோவையில் சிறுவன் தாக்கப்பட்ட விவகாரம்: இரண்டு வாரத்தில் பதில் அளிக்க நோட்டீஸ்

By: Nagaraj Tue, 30 June 2020 7:55:45 PM

கோவையில் சிறுவன் தாக்கப்பட்ட விவகாரம்: இரண்டு வாரத்தில் பதில் அளிக்க நோட்டீஸ்

கோவையில் சிறுவன் தாக்கப்பட்ட விவகாரத்தில் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு மனித உரிமைகள் ஆணையம் கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரணுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கோவை ரத்தினபுரி சாஸ்திரி வீதியில் தள்ளுவண்டி கடை நடத்தி வருபவர் வேல்மணி. இவர் தனது மனைவி மற்றும் தனது மகனுடன் இரவு 8 மணிக்கு மேல் தள்ளுவண்டி கடை நடத்தி வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் செல்லமணி டிபன் கடையை உடனே மூடும்படி அறிவுறுத்தியுள்ளார்.

ஆனால், அவர்கள் கடையை அடைக்க மறுத்து காவலர்களுடன் வாக்குவாதம் நடத்தினர். இதனால் காவல் உதவி ஆய்வாளர் அவர்கள் இருவரது செல்போனையும் பிடுங்கிக்கொண்டு ஒருமையில் பேசி திட்டினார்.

coimbatore,boy,cops,attackers,notices ,கோவை, சிறுவன், போலீசார், தாக்கினர், நோட்டீஸ்

இதனை பார்த்துக் கொண்டிருந்த பள்ளி மாணவர் தனது தாய் , தந்தையை போலீசார் திட்டுவதை கண்டு ஆவேசம் அடைந்து உதவி ஆய்வாளரின் இருசக்கர வாகன சாவியை பிடுங்கிக் கொண்டு கைகலப்பில் ஈடுபட்டார்.

இதனையடுத்து போலீசார் சாவியை பிடுங்கிக் கொண்டு மாணவரை தாக்கினர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் சிறுவன் தாக்கப்பட்ட விவகாரத்தில் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு மனித உரிமைகள் ஆணையம் கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரணுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|