Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கேமில் தொடர்ந்து தோற்கடித்ததால் 10 வயது சிறுமியை கல்லால் அடித்துக்கொன்ற 11 வயது சிறுவன்

கேமில் தொடர்ந்து தோற்கடித்ததால் 10 வயது சிறுமியை கல்லால் அடித்துக்கொன்ற 11 வயது சிறுவன்

By: Monisha Tue, 08 Sept 2020 09:48:40 AM

கேமில் தொடர்ந்து தோற்கடித்ததால் 10 வயது சிறுமியை கல்லால் அடித்துக்கொன்ற 11 வயது சிறுவன்

ஆன்லைன் கேமில் தன்னை தொடர்ந்து தோற்கடித்ததால் 10 வயது சிறுமியை 11 வயது சிறுவன் கல்லால் அடித்துக்கொன்ற சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்ட லசூடியா பகுதியை சேர்ந்த 11 வயது சிறுவனும் அதே பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமியும் 'ப்ரி பயர்' என்ற ஆன்லைன் கேம் விளையாடி வந்துள்ளனர். இந்த ஆன்லைன் கேமில் அந்த 11 வயது சிறுவனை வீழ்த்தி 10 வயது சிறுமியே தொடர்ந்து வெற்றிபெற்று வந்துள்ளார்.

ஒரே பகுதி மற்றும் அருகருகே வீடு என்பதால் சில நேரங்களில் இந்த சிறுவன் மற்றும் சிறுமி இடையே சிறுசிறு சண்டைகள் இருந்து வந்துள்ளன. மேலும், அந்த 11 வயது சிறுவன் வளர்த்துவந்த செல்லப்பிராணியான வெள்ளைநிற எலி சமீபத்தில் உயிரிழந்துள்ளது. செல்லப்பிராணியின் இந்த உயிரிழப்புக்கு 10 சிறுமிதான் காரணம் என கருதிய அந்த சிறுவன் அடிக்கடி சண்டையிட்டுள்ளான்.

free fire,online game,murder,boy,girl ,ப்ரி பயர்,ஆன்லைன் கேம்,கொலை,சிறுவன்,சிறுமி

ஆனால், செல்லப்பிராணியின் உயிரிழப்புக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என அந்த சிறுமி கூறியுள்ளார். இதானால் இருவருக்கும் இடையே சில நாட்களாக மோதல் அதிகரித்து வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று மதியம் 1 மணியளவில் சிறுமி தனது வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்துள்ளார். அப்போது அங்குவந்த அந்த 11 வயது சிறுவன் ஆன்லைன் கேமில் தன்னை தொடர்ந்து தோற்கடித்துவந்த சிறுமியிடம் மிகுந்த கோபத்தில் சண்டையிட்டுள்ளான். மேலும், அருகில் கிடந்த கற்கலைக்கொண்டு சிறுமி மீது எறிந்துள்ளான். இதனால் இருவரும் ஒருவரை ஒருவர் மாற்றிமாற்றி கல்லால் எறிந்துள்ளனர். அப்போது சிறுவன் எறிந்த ஒரு கல் ஒன்று வேகமாக தலையில் பட்டதில் சிறுமி நிலை குலைந்து கீழே விழுந்துள்ளார்.

சிறுமி தரையில் விழுந்தபோதும் ஆத்திரமடங்காத அந்த 11 வயது சிறுவன் அந்த 10 வயது சிறுமியின் தலையில் பெரிய கற்களால் தொடர்ந்து அடித்துள்ளார். 11 வயது சிறுவனின் இந்த கொடூர தாக்குதலால் படுகாயமடைந்த அந்த 10 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

free fire,online game,murder,boy,girl ,ப்ரி பயர்,ஆன்லைன் கேம்,கொலை,சிறுவன்,சிறுமி

சிறுமி உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்ட அக்கம்பக்கத்தினரும், சிறுமியின் பெற்றோரும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டர். அங்கு பொறுத்தப்பட்டிருந்த சிசிடிடி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் பதிவான காட்சியில் சிறுவன் அப்பகுதியில் சுற்றித்திரிந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, அந்த சிறுவனிடம் விசாரணை செய்ய அவனது வீட்டிற்கு போலீசார் சென்றனர். ஆனால், அந்த சிறுவன் தனது வீட்டில் உள்ள குளியலறையில் ரத்தக்கறை படிந்திருந்த தனது சட்டையை துவைத்துக்கொண்டிருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் அந்த சிறுவனிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ஆன்லைன் கேமில் தன்னை தொடர்ந்து தோற்கடித்ததால் ஏற்பட்ட அத்திரத்தில் அந்த 10 வயது சிறுமியை கல்லால் அடித்து கொலைசெய்ததாக அந்த சிறுவன் தெரிவித்தான். இதையடுத்து, அந்த சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags :
|
|