Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆன்லைன் கேமில் தொடர்ந்து தோற்கடித்து வந்த சிறுமியை கல்லால் அடித்துக்கொன்ற சிறுவன்

ஆன்லைன் கேமில் தொடர்ந்து தோற்கடித்து வந்த சிறுமியை கல்லால் அடித்துக்கொன்ற சிறுவன்

By: Karunakaran Tue, 08 Sept 2020 12:49:21 PM

ஆன்லைன் கேமில் தொடர்ந்து தோற்கடித்து வந்த சிறுமியை கல்லால் அடித்துக்கொன்ற சிறுவன்

ஊரடங்கு காரணமாக அனைவரும் வீட்டிலே முடங்கியுள்ளதால், அனைவருக்கும் ஆன்லைன் விளையாட்டுக்களில் ஆர்வம் அதிகரித்துவிட்டது. இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்ட லசூடியா பகுதியை சேர்ந்த 11 வயது சிறுவனும் அதே பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமியும் ’ப்ரி பயர்’ என்ற ஆன்லைன் கேம் விளையாடி வந்துள்ளனர். இந்த ஆன்லைன் கேமில் 10 வயது சிறுமியே தொடர்ந்து வெற்றிபெற்று வந்துள்ளார்.

அருகருகே வீடு என்பதால் சில நேரங்களில் சிறுவனுக்கும், சிறுமிக்கும் இடையே சிறுசிறு சண்டைகள் இருந்து வந்துள்ளன. சமீபத்தில் அந்த 10 வயது சிறுவன் வளர்த்துவந்த செல்லப்பிராணியான வெள்ளைநிற எலி இறந்து விட்டது. அதற்கு அந்த 10 சிறுமிதான் காரணம் என கருதிய அந்த சிறுவன் அடிக்கடி சண்டையிட்டுள்ளான். சில நாட்களாக மோதல் அதிகரித்து வந்தநிலையில், ஆன்லைன் கேமில் தன்னை தொடர்ந்து தோற்கடித்துவந்ததால் அந்த சிறுவன், சிறுமியிடம் மிகுந்த கோபத்தில் சண்டையிட்டுள்ளான்.

boy,madhya pradesh,defeat,online game ,சிறுவன், மத்தியப் பிரதேசம், தோல்வி, ஆன்லைன் விளையாட்டு

சிறுவனும், சிறுமிம் இடையே சண்டை ஏற்பட்டதால், இருவரும் ஒருவரை ஒருவர் மாற்றிமாற்றி கல்லால் எறிந்துள்ளனர். அப்போது சிறுவன் எறிந்த ஒரு கல் ஒன்று வேகமாக தலையில்
பட்டதில் சிறுமி நிலை குலைந்து கீழே விழுந்துள்ளார். அப்போதும், ஆத்திரமடங்காத சிறுவன் சிறுமியின் தலையில் பெரிய கற்களால் தொடர்ந்து அடித்தார். இதனால் சிறுமி சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தார்.

சிறுமி உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்ட அக்கம்பக்கத்தினரும், சிறுமியின் பெற்றோரும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, சிறுவனுக்கும், உயிரிழந்த சிறுமிக்கும் இடையே சிறுசிறு மோதல்கள் இருந்ததை அங்கு பொறுத்தப்பட்டிருந்த சிசிடிடி கேமராக்களை ஆய்வு செய்து கண்டறிந்தனர். பின்னர் அந்த சிறுவனிடம் விசாரணை செய்ய அவனது வீட்டிற்கு போலீசார் சென்றபோது, சிறுவன் தனது வீட்டில் உள்ள குளியலறையில் ரத்தக்கரை படிந்திருந்த தனது சட்டையை துவைத்துக்கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அந்த சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
|
|