Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கவனிக்க ஆளில்லாமல் சாலையில் மயங்கி விழுந்த டி.எம்.சவுந்தர்ராஜனின் சகோதரர்

கவனிக்க ஆளில்லாமல் சாலையில் மயங்கி விழுந்த டி.எம்.சவுந்தர்ராஜனின் சகோதரர்

By: Nagaraj Tue, 09 June 2020 08:01:05 AM

கவனிக்க ஆளில்லாமல் சாலையில் மயங்கி விழுந்த டி.எம்.சவுந்தர்ராஜனின் சகோதரர்

மதுரையில் கவனிக்காத ஆளில்லாமல் சாலையில் விழுந்து கிடந்துள்ளார் டி.எம். சவுந்தர்ராஜனின் சகோதரர்.

இன்று வரை தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் டி.எம் சவுந்தர்ராஜன். இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே 1944-ல் இவரது சகோதரரான டிஎம் கிருஷ்ணமூர்த்தி உடன் கச்சேரிகளில் பங்கேற்றுள்ளார்.

டிஎம்எஸ்.,யை விட நான்கு வயது இளையவரான டி.எம் கிருஷ்ண மூர்த்தி மிருதங்க வித்துவானாக ஜொலித்தவர். குறிப்பாக அவரது சகோதரர் டிஎம்எஸ்.,க்கு இசை ரீதியாக உதவிகள் செய்தவர்.


old age,fainted,dm soundararajan,brother,madurai ,முதுமை, மயங்கி விழுந்தார், டி.எம.சவுந்தர்ராஜன், சகோதரர், மதுரை

இவரது இசை சேவையை பாராட்டி கடந்த 2003 ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. தற்பொழுது 94 வயதான டி.எம்.கிருஷ்ணமூர்த்தி , 91 வயதான தனது மனைவியுடன் மதுரை ஒத்தக்கடை அருகே நரசிங்கம் அப்பகுதியில் வசித்து வருகிறார்.

கலைமாமணி விருது பெற்றதற்காக தமிழக அரசு சார்பில் மாதந்தோறும் வழங்கப்படும் 2500 ரூபாயை நம்பியே இருவரும் குடும்பம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று மதுரை ஆட்சியர் அலுவலகம் வந்தார்.

நிற்க முடியாத அளவிற்கு முதுமை காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக சாலையில் மயங்கி விழுந்துள்ளார். தூக்க ஆளின்றி நீண்ட நேரம் கூச்சலிட்டுக் கொண்டு இருந்த அக்கம்பக்கத்தினர் உதவிகள் செய்து விசாரித்தனர். பின்னர் விபரம் அறிந்து அவரை ஆட்டோவில் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags :