Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆர்ப்பாட்டம் நடத்திய உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு

ஆர்ப்பாட்டம் நடத்திய உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு

By: Nagaraj Tue, 27 Oct 2020 10:02:09 PM

ஆர்ப்பாட்டம் நடத்திய உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு

உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குபதிவு... கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்திய திமுகவின் உதயநிதி ஸ்டாலின் மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவையில் நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து தி.மு.க., சார்பில் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் இளைஞரணியின் உதயநிதி தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

case,dmk demonstration,coimbatore,interruption,udayanithistalin ,வழக்குப்பதிவு, திமுக ஆர்ப்பாட்டம், கோவை, இடையூறு, உதயநிதிஸ்டாலின்

சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ.,உள்ளிட்டோர் பலர் கொண்டனர். ஆர்பாட்டத்தின் போது பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் மற்றும் நீட் தேர்வு குறித்து கிராமப்புற மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்துதல் போன்ற பிரிவுகளின் கீழ் உதயநிதி உள்ளிட்ட ஒன்பது பேரின் மீது கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கோவையில் நடைபெற்ற தி.மு.க., ஆர்பாட்டத்தின்போது அத்துமீறி மேடை அமைத்தது மற்றும் பொது மக்களுக்கு இடையூறு செய்ததாக 7 பேர் மீது கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

Tags :
|