Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாரடோனாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக வழக்கு; விசாரணை நடத்த உத்தரவு

மாரடோனாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக வழக்கு; விசாரணை நடத்த உத்தரவு

By: Nagaraj Tue, 01 Dec 2020 12:42:57 PM

மாரடோனாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக வழக்கு; விசாரணை நடத்த உத்தரவு

கால்பந்து ஜாம்பவான் மாரடோனாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கால்பந்து உலகில் தனது அசாத்திய திறமையால் சாதனை படைத்தவர் மாரடோனா. கடந்த சில வாரங்களுக்கு முன்பு மூளையில் ஏற்பட்ட ரத்த கட்டிக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்ட அவர் தனது மகளின் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.

ஆனால் கடந்த நவம்பர் 26-ந் தேதி திடீரென மாரடோனா மரணமடைந்துவிட்டதாக தகவல் வெளியானது. இதனையடுத்து மாரடோனாவின் மரணத்திற்கு அர்ஜென்டினா நாட்டில் ஒரு வாரம் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

maradona,court,order,death,trial, ,மாரடோனா, நீதிமன்றம், உத்தரவு, மரணம், வழக்கு, சோதனை

இந்நிலையில் மாரடோனாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி சில வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இதையடுத்து மாரடோனாவின் மரணம் குறித்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாரடோனாவின் தனி மருத்துவரின் சொத்து விபரம் குறித்து கணக்கெடுக்கவும், வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags :
|
|
|
|