- வீடு›
- செய்திகள்›
- பாஜக தொண்டர்களை அடிப்படையாக கொண்ட கட்சி என்பதால் தான் காங்கிரஸ் பயப்படுகிறது - நளின்குமார் கட்டீல்
பாஜக தொண்டர்களை அடிப்படையாக கொண்ட கட்சி என்பதால் தான் காங்கிரஸ் பயப்படுகிறது - நளின்குமார் கட்டீல்
By: Karunakaran Mon, 06 July 2020 12:13:48 PM
கர்நாடக காங்கிரஸ் தலைவராக தற்போது டி.கே.சிவக்குமார் பதவியேற்றுள்ளார். இந்நிலையில் பாஜக தொண்டர்களை அடிப்படையாக கொண்ட கட்சி. அதனால் தான் காங்கிரஸ் பயப்படுகிறது என கர்நாடக பாஜக தலைவர் நளின்குமார் கட்டீல் கூறியுள்ளார்.
கர்நாடக பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடகத்தில் மூழ்கும் படகிற்கு டி.கே.சிவக்குமார் தலைவராகியுள்ளார். ஊரடங்கின்போது கஷ்டத்தில் உள்ள மக்களுக்கு உதவ வேண்டும் என்று எங்கள் கட்சி மேலிடம் உத்தரவிட்டது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், கட்சி மேலிடம் உத்தரவின்படி,நாங்கள் ஏழை மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினோம். மருந்துகள், முகக்கவசங்கள் வினியோகம் செய்தோம். கர்நாடகத்தில் பா.ஜனதாவை ஒழிக்க யாராலும் முடியாது என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் இல்லாத நாட்டை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், பா.ஜனதா தொண்டர்களை அடிப்படையாக கொண்ட கட்சி. அதனால் தான் காங்கிரஸ் பயப்படுகவதாகவும், காங்கிரஸ் தனி நபர்களை அடிப்படையாக கொண்ட கட்சி எனவும் நளின்குமார் கட்டீல் தெரிவித்துள்ளார்.