Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிலிப்பைன்சில் சிக்கியிருந்த இந்தியர்கள் 241 பேர் மும்பை வந்து சேர்ந்தனர்

பிலிப்பைன்சில் சிக்கியிருந்த இந்தியர்கள் 241 பேர் மும்பை வந்து சேர்ந்தனர்

By: Nagaraj Mon, 11 May 2020 09:37:01 AM

பிலிப்பைன்சில் சிக்கியிருந்த இந்தியர்கள் 241 பேர் மும்பை வந்து சேர்ந்தனர்

பிலிப்பைன்சில் சிக்கியுள்ள இந்தியர்களில் 241 பேர் தலைநகர் மணிலாவிலிருந்து ஏர்இந்தியா சிறப்பு விமானம் மூலம் புறப்பட்டு நேற்று இரவு மும்பை சர்வதேச விமான நிலையம் வந்து சேர்ந்தனர்.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு காரணமாக விமான சேவைகள் முடங்கின. பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர்.

isolation,philippines,indians,mumbai,airline ,தனிமை, பிலிப்பைன்ஸ், இந்தியர்கள், மும்பை, விமானம்

சொந்த நாடு திரும்ப முடியாத இந்தியர்களை மீட்டு வரும் 'வந்தே பாரத்' நடவடிக்கையினை மத்திய அரசு துவக்கியுள்ளது. இதன்படி ஏற்கனவே பல்வேறு நாடுகளில் சிக்கிய இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களில் 241 பேர் தலைநகர் மணிலாவிலிருந்து ஏர்இந்தியா சிறப்பு விமானம் மூலம் புறப்பட்டு நேற்று இரவு மும்பை சர்வதேச விமான நிலையம் வந்திறங்கினர். அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளதையடுத்து தனிமை முகாம் அனுப்பி வைக்கப்படுவர்.

Tags :
|