முன்னாள் எம்.பி.,யின் மனுவை நிராகரிப்பு செய்தது நீதிமன்றம்
By: Nagaraj Fri, 07 Aug 2020 6:30:29 PM
விசாரணைக்கு எடுக்காமலேயே நிராகரிப்பு... உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தான் கைதுசெய்யப்படுவதை தடுக்கும் உத்தரவொன்றை வௌியிடுமாறு கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தாக்கல்செய்த அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரிக்கப்பட்டுள்ளது.
புவனெக அலுவிகாரே, பீ.தெஹிதெனிய மற்றும் எம்.துரைராஜா ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாமினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்த மனு குறித்து விளக்கமளித்த சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி
சொலிசிட்டர் ஜெனரல் நெரீன் புல்லே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்
தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை சிக்கலானது எனத் தெரிவித்தார்.
இந்நிலையில்,
மனுதாரரின் கோரிக்கைக்கு அமைவாக தடையுத்தரவு வௌியிடப்பட்டால் விசாரணை
நடவடிக்கைகளை உரியமுறையில் முன்னெடுத்துச் செல்வதற்கு இடையூ ஏற்படலாம் என
சுட்டிக்காட்டினார்.
இதையடுத்து, நீண்ட பரிசீலனையின் பின்னர்
குறித்த மனு விசாரணைக்கு அனுமதி வழங்கும் அளவிற்கு போதுமான சட்ட ஏற்பாடுகள்
வௌிப்படாததால் அதனை நிராகரிப்பதாக உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.