Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விமானங்களில் 75 சதவீத பயணிகள் பயணிக்க மத்திய அரசு அனுமதி

விமானங்களில் 75 சதவீத பயணிகள் பயணிக்க மத்திய அரசு அனுமதி

By: Nagaraj Thu, 05 Nov 2020 10:36:59 PM

விமானங்களில் 75 சதவீத பயணிகள் பயணிக்க மத்திய அரசு அனுமதி

மத்திய அரசு அனுமதி... பண்டிகை காலங்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து விமானங்களில் 70-75 சதவீதம் பயணிகள் பயணிக்க மத்திய அரசு அனுமதியளித்தது.

இந்தியாவில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடு தளர்வு மெல்ல, மெல்ல மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் சர்வதேச விமான பயணத்திற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. வந்தே பாரத் சிறப்பு திட்டத்தின் கீழ் வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

order,federal government,flights,number,passengers ,உத்தரவு, மத்திய அரசு, விமானங்கள், எண்ணிக்கை, பயணிகள்

இந்த சூழ்நிலையில் தற்போது விமானத்தில் பயணிகள் 60% மட்டுமே பயணிக்க விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அனுமதி வழங்கியிருக்கிறது. மேலும் ஏற்கனவே வெளியிடப்பட்ட விதிமுறைகள் படி கட்டண முறை பின்பற்றப்படும் நவம்பர் ஒன்றாம் தேதி மட்டும் 2.5 லட்சம் பயணிகள் விமானத்தில் பயணித்துள்ளனர்.

இந்த நிலையில் பண்டிகை காலங்கள் அடுத்தடுத்து வருவதையொட்டி பயணிகள் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து விமானங்களில் 70 முதல் 75 சதவீதம் அளவிற்கு பயணிகள் பயணிப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. இது 2021 பிப்ரவரி 24 வரை மட்டுமே இந்த உத்தரவு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|