Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை பாகிஸ்தான் அரசு நீக்கியது

டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை பாகிஸ்தான் அரசு நீக்கியது

By: Karunakaran Tue, 20 Oct 2020 1:12:10 PM

டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை பாகிஸ்தான் அரசு நீக்கியது

உலகின் பல்வேறு பகுதிகளில் 'டிக் டாக்' செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வீடியோ செயலி இளம் வயதினர் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. இருப்பினும் இதில் அநாகரிகமான பதிவுகளும் வெளியிடப்படுவதாக அவ்வப்போது குற்றச்சாட்டு எழுந்து வருகின்றன. அதன்படி, டிக் டாக் செயலியில் ஒழுக்க கேடான மற்றும் அநாகரிகமான வீடியோக்கள் வெளியாவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியது.

பின்னர் பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் அந்த செயலிக்கு அக்டோபர் 10-ம் தேதி முதல் தடை விதித்துள்ளது. சமூகத்தில் பல்வேறு தரப்பினர் மத்தியில் இருந்த தொடர் புகார்களை அடுத்து டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் முடிவு மேற்கொள்ளப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இது சீனாவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

pakistan,ban,tik tok,china ,பாகிஸ்தான், தடை, டிக் டாக், சீனா

இந்நிலையில் டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கவேண்டும் என பாகிஸ்தானுக்கு சீனா நிர்ப்பந்தம் கொடுத்து வந்தது. தற்போது, டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இதேபோல் டிரம்ப்பும் டிக் டாக் செயலுக்கு தடை விதிப்பதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

லடாக் மோதலுக்கு பின் இந்திய - சீன உறவில் விரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக பல்வேறு சீன செயலிகளுக்கு இந்திய மத்திய அரசு தடை விதித்தது அதில் டிக் டாக் செயலியும் ஒன்று. இதன் காரணமாக சீனா கடுமையாக பாதிப்படைந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
|