Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கவர்னர் கட்டுப்பாடான வார்த்தைகளை பயன்படுத்தி இருக்க வேண்டும்

கவர்னர் கட்டுப்பாடான வார்த்தைகளை பயன்படுத்தி இருக்க வேண்டும்

By: Nagaraj Sun, 18 Oct 2020 7:17:01 PM

கவர்னர் கட்டுப்பாடான வார்த்தைகளை பயன்படுத்தி இருக்க வேண்டும்

கட்டுப்பாடுகளுடன் வார்த்தைகளை பயன்படுத்தி இருக்க வேண்டும்... மஹாராஷ்டிரா கவர்னர் கோஷ்யாரி, முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எழுதிய கடிதத்தில் வார்த்தைகளை கட்டுப்பாடுகளுடன் பயன்படுத்தியிருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில், பல்வேறு கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தாலும், வழிபாட்டு தலங்களை திறப்பது குறித்து, மாநில அரசு அறிவிப்பு வெளியிடவில்லை.

இதையடுத்து, முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு, கவர்னர் பி.எஸ்.கோஷ்யாரி, கடிதம் எழுதினார். அதில், 'முதல்வராக பதவி ஏற்றதும், அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று, உத்தவ் தாக்கரே வழிபட்டார். ஹிந்துத்துவ கொள்கையில் அவ்வளவு பிடிப்புடன் இருந்தவர், திடீரென, மதசார்பற்றவராக மாறிவிட்டாரா. வழிபாட்டு தலங்களை திறக்க, ஏன் உத்தரவிடாமல் இருக்கிறார்' என, குறிப்பிட்டிருந்தார்.

governor,maharashtra,union minister,letter,interview ,கவர்னர், மகாராஷ்டிரா, மத்திய அமைச்சர், கடிதம், பேட்டி

இதற்கு உத்தவ் தாக்கரே எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஒரு பேட்டியில் கூறியுள்ளதாவது: அந்த கடிதத்தை நானும் படித்தேன். அவர் சில குறிப்புகளை தெரிவித்துள்ளார்.

இருப்பினும், வார்த்தைகளை பயன்படுத்துவதில் மிகவும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டிருக்க வேண்டும் என நானும் எண்ணுகிறேன். நடிகர் சுஷாந்த் ராஜ்புத் தற்கொலை வழக்கை, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் மஹாராஷ்டிரா கையாண்டது. இந்த வழக்கை, துவக்கத்தில் சிபிஐ.,யிடம் ஒப்படைப்பதில் சர்ச்சையை கிளப்பியது.

ஆனால், முதல்நாளில் இருந்தே இந்த வழக்கு தொடர்பாக பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. இந்த வழக்கை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைத்தது உச்சநீதிமன்றம் தான். பீஹாரை சேர்ந்த நடிகர் திடீர் மரணம், எப்படி அரசியல் விஷயமாகும் என எனக்கு தெரியவில்லை. இது போன்ற வழக்குகளில் நேர்மையாக விசாரணை நடக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags :
|