தலைமை நீதிபதி உடல்நிலை சீராக உள்ளது; அமைச்சர் தகவல்
By: Nagaraj Fri, 06 Nov 2020 11:06:15 PM
அமைச்சர் தகவல்... சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் உடல்நிலை சீராக இருக்கிறது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான ஏ.பி.சாஹிக்கு, லேசான காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் இருந்துள்ளது. அதனால் அவர் நேற்று சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு அங்கு கொரோனா பரிசோதனை, சி.டி.ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதன் முடிவில், ஏ.பி.சாஹிக்கு நெஞ்சக பகுதியில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அவரது சி.டி ஸ்கேன் முடிவுகளை வைத்தே கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட
நிலையில், கொரோனா பரிசோதனை முடிவு வந்தால் அடுத்த கட்ட சிகிச்சைகள்
அளிக்கப்படும் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த
நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர்
விஜயபாஸ்கர், தலைமை நீதிபதியின் உடல்நிலை சீராக உள்ளது. கொரோனா அறிகுறி
இருந்தால் மருத்துவமனைக்கு வந்தால் மட்டுமே குணப்படுத்த முடியும். அனைவரும்
கட்டாயம் மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும்’ என
தெரிவித்தார்.