Advertisement

இலங்கையில் கொரோனா பாதிப்பு 21 ஆயிரத்தை நெருங்குகிறது

By: Nagaraj Wed, 25 Nov 2020 5:28:50 PM

இலங்கையில் கொரோனா பாதிப்பு 21 ஆயிரத்தை நெருங்குகிறது

மேலும் 458 பேருக்கு கொரோனா... நாட்டில் மேலும் 458 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திவுலபிட்டிய - பேலியகொட கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 17,436 ஆக உயர்ந்துள்ளது..

corona,sri lanka,treatment,medical monitoring,number ,
கொரோனா, இலங்கை, சிகிச்சை, வைத்திய கண்காணிப்பு, எண்ணிக்கை

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 20,967ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கொரோனா தொற்றால் 465 பேர் நேற்றைய தினம் குணமடைந்தனர். அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளாகிக் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,962 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 5,911 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா சந்தேகத்தில் 480 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றால் இதுவரை 94பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Tags :
|