Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வேகத்தடைக்கு வெள்ளை வண்ணம் பூச பிச்சை எடுக்கும் நூதன போராட்டம்

வேகத்தடைக்கு வெள்ளை வண்ணம் பூச பிச்சை எடுக்கும் நூதன போராட்டம்

By: Nagaraj Sun, 28 June 2020 09:29:05 AM

வேகத்தடைக்கு வெள்ளை வண்ணம் பூச பிச்சை எடுக்கும் நூதன போராட்டம்

வேகத்தடைக்கு வெள்ளை வண்ணம் பூச பலமுறை கோரிக்கை விடுத்தும் நிதி இல்லை என்று நெடுஞ்சாலைத்துறை கூறியதால் பிச்சை எடுத்து நிதி திரட்டும் நூதன போராட்டம் நடத்தப்பட்டது.

திருச்சி திருவானைக்காவலில் உள்ள ரயில்வே மேம்பாலத்துடன் சாலை இணையும் இடத்தில் வாகனங்களின் வேகத்தை குறைக்க வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், வேகத்தடையை அடையாளப்படுத்தும் வகையில் வெள்ளை வண்ணம் பூசப்படாததால் அடிக்கடி வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன.

இதுதொடர்பாக பல முறை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் முறையிட்டும், நிதி இல்லை எனக் கூறி அவர்கள் அதை தட்டிக் கழித்து வந்துள்ளனர்.

the begging,the fight,the highway,the speed limit ,பிச்சை, எடுக்கும் போராட்டம், நெடுஞ்சாலைத்துறை, வேகத்தடை

இதையடுத்து வர்ணம் பூசுவதற்காக நிதி திரட்டி நெடுஞ்சாலைத் துறைக்கு அளிக்க, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திருவானைக்காவல் நெடுஞ்சாலையில் பிச்சை எடுக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு ஸ்ரீரங்கம் பகுதிச் செயலாளர் தர்மா தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

தகவலறிந்து வந்த காவல் துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இரு தினங்களில் வேகத்தடைக்கு வண்ணம் பூசப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.

Tags :